Monday 15 October 2012

பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள்


அன்பான காலை வணக்கம் நண்பர்களே

ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]
நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

 அசைபோட 5 விஷயங்கள்
 ***********************
1.சிரிக்கலாம் வாங்க
*********************
கணவன்: கடைசி முறையாக கேட்கிறேன், கிளம்புகிறாயா? இல்லையா? மனைவி: நானும் எவ்ளோ நேரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்.. இதோ வந்துடுறேன்னு.. இருங்க..
இந்தியா, பாகிஸ்தான் ரெண்டுக்கும் நடுவுல என்ன இருக்கு... சொல்லுங்க பார்ப்போம்." "தெரியலையா?, கமா(,) தான்."
"ஒருத்தர் தன்னோட cell எடுத்துக்கிட்டு dentista பார்க்க போனாரு ஏன்?" "அதுல blue tooth இருக்கான்னு check பண்ணத்தான்
"பஸ்ஸில் சீட் இருந்தும் நின்னுக்கிட்டே வந்தேன்." "சீட் இருந்தும் ஏன் நின்னுக்கிட்டே வந்தீங்க?" "சீட்டில் எல்லோரும் உட்கார்ந்திட்டிருந்தாங்க."

*****************************************************************************
2.அழகே நலமா?
*துளசி இலை மற்றும் வேப்ப மரத்தின் கொழுந்து இலைகள் இரண்டையும் பறித்து சுத்தம் செய்து நன்கு கழுவி நிழலில் காய வைத்து உலர்த்தி இடித்து பொடி செய்து அதனுடன் கடலை மாவு சேர்த்து சிறிது எலுமிச்சை பழச்சாறு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் வைத்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் குறைந்து முகம் பளபளப்பாக மாறும்.

*எலுமிச்சம் பழச்சாற்றில் சாப்பாட்டு உப்பை கலந்து பற்களில் தேய்த்துக் கழுவவேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து வந்தால் பற்கள் பளபளப்பாக காணப்படும்.

 ********************************************************************************
3.அன்பே நலமா?
முருங்கை கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.
கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும்



 ****************************************************************************
 4.ஆன்மீ கம்
1.ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இந்த மந்திரத்தை பிள்லைகளுக்கு நாம சங்கிர்த்தனத்துக்கு சொல்லி கொடுங்கள்,இளம் வயதிலேயே மத ச்சர்பின்மை மனதில் வலரும் இதுவும் ஒரு மஹா மந்திரமே,இதை ஜெபிப்பது பாவங்களையும் தோஷங்களையும் போக்கும்,வெற்றி தரும்.
2.மூல நட்சதிரம் உள்ளவர்களை கீழ்கண்ட பரிகாரம் செய்வித்தபின் திருமணம் செய்யலாம் தோஷமில்லை - சித்தர்கள் பரிகாரம்
தால் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் திருமணம் ஒரு தடையாக மாறி விடுகிறது. பரிகாரம் வாயிலாக மேற்கண்ட தோஷத்தைச் சரி செய்யலாம் என்று அகத்தியர் உள்ளிட்ட சித்தர்கள் வழிகாட்டி உள்ளார்கள்.

பரிகாரங்கள் விவரம் வருமாறு:-1. சிவன் கோவில் தல விருட்சத்தின் வேர்ப்பகுதியில் உள்ள மண் ஒரு கைப்பிடி, 2. யானை மிதித்த இடத்து மண் ஒரு கைப்பிடி, 3. பசுவின் கால் பட்ட இடத்து மண் ஒரு கைப்பிடி, 4. புற்று மண் ஒரு கைப்பிடி, 5. வயல்வெளியில் உள்ள நண்டு வளையின் புற்றுமண் ஒரு கைப்பிடி, 6. கண்மாயில் உள்ள மண் ஒரு கைப்பிடி, 7. கடற்கரை மண் ஒரு கைப்பிடி
 மேற்கண்ட ஏழு வகையான மண்ணை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். மூல நட்சத்திரத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மேற்படி மண்ணை உடல் முழுக்கத் தடவி 45 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும். இதனால் தோஷங்கள் நிவர்த்தி ஆகி பரிகாரம் செய்த 90 நாட்களுக்குள் திருமணம் சுபமாக நடக்கும்.
***********************************
நண்பேண்டா
***********************************
*
*அன்பெனும்
தேன் தடவி வைத்திருக்கிறேன்
என்
இதயத்தில்
நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
*
கிருஸ்ணன் – குசேலன்
 சீத்தலை சாத்தனார் – பிசிராந்தையார்
 கர்ணன் – துரியோதனன்
 ஓம் - ?
 என்ன்னோடு – அந்த இடத்தை
 நிரப்ப யார்
 இருக்கிறீர்கள்?
*
*நண்பர்கள்
இதயமும் தேவைப்படுகிறது
என் அன்பு
அளவுகடந்தது
அதை அடைத்து வைக்க
ஒரு இதயம் போதாது
என்பதால்!
*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.
**
** நம் நண்பர்கள்தான்
நம் சொத்துக்கள்
விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**

***********************************************
நலாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்கு
உங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு          ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள்          குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்

மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள்          ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த    உலகை       மாற்றட்டும்.
உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.

 மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.
ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]
இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.
மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.
தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.

 எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.

 எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

 அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
-அன்புடன் ஓம் 8056156496

No comments:

Post a Comment