Thursday 11 October 2012





அன்பான காலை வணக்கம் நண்பர்களே
ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]
நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

 அசைபோட 5 விஷயங்கள்
 ***********************
1.சிரிக்கலாம் வாங்க
*********************
"நம்ம கூட்டணியிலிருந்து எதிர்க்கட்சிக்குப் போன கட்சித் தலைவரைப் பற்றி கூட்டத்தில எப்படி பேசணும் தலைவரே?" "நம்பிக்கைத் துரோகின்னு பேசுங்க." "அவர் திரும்ப நாளைக்கே நம்ம பக்கம் வந்துட்டா...?" "நம் குடும்பத்திலிருந்து பிரிந்துச் சென்று மீண்டும் இணைய வந்துள்ள உடன் பிறப்பேன்னு பேசிடலாம்."
மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்..எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க? கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்.. நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்ஷுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..!
கணவன்: (மனைவியிடம்) இன்னிக்கு நீ ஒரு கருப்பு நாய்க்கு சோறு வச்சியா? மனைவி: ஆமாங்க. ஏன் கேட்கிறீங்க? கணவன்: அதுவா.. தெரு ஓரத்தில ஒரு கருப்பு நாய் செத்துப்போய் கிடந்தது. அதனான் கேட்டேன். மனைவி: ???
 *****************
அழகே நலமா?
வியர்வை நாற்றமா இனி கவ்லை வேண்டாம்
தினமும் எலுமிச்சை பழத்தை வெட்டி உடலில் நன்குதேய்த்து குளித்து வந்தால் போதும் முற்றிலும் நாற்றம் நீங்கும்.சோப்பு பயன்படுத்தக்கூடாது.
அன்ஹ்ட நாளில் ஆவரம்பூ கூட்டு தொடர்ந்து பயன்படுத்தினால் முற்றிலும் வேர்வை நாற்றம் நீங்கும்,பூவுக்கெங்கே போவது  நாட்டு மருந்து கடயில் கிடைக்கும் உலர்ந்த பூவை நீரில் கழுவி பயன்படுத்தலாம்.அல்லது கஷாயம் வைத்து குடிக்கலானம்
 ********************************************************************************
3.அன்பே நலமா?
மாதவிலக்கு ஆன மூணாவது நாள் முதல் முத்தின வேப்பிலை நூறு கிராம் எடுத்து கஷாயம் செஞ்சி காலயில வெறும் வயித்துல (ரெண்டு பேரும்) ஆறு நாளைக்கு குடிக்கணும். அதுக்கு அப்புறமா அரச இலை, மா இலை வகைக்கு அம்பது கிராம் எடுத்து கஷாயம் போட்டு நூறு மில்லி வீதம் ஒன்பது நாள் வெறும் வயித்துல சாப்பிடணும். இந்த கஷாயத்த சாப்பிடும்போது சாப்பாட்டுல மோர்,கருவேப்பிலை கொத்தமல்லி தழை எல்லாம் கொஞ்சம் அதிகமா சேர்த்துக்கோங்க. ராத்திரி சாப்பாடு பாதி அளவுதான் இருக்கணும். மாதுளம்பழம் சபிடுங இதை சரியா பின்பற்றினா குழந்தை பாக்கியத்துக்கு வாய்ப்பு இருக்கு.

 ****************************************************************************
 4.ஆன்மீ கம்
1.ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இந்த மந்திரத்தை பிள்லைகளுக்கு நாம சங்கிர்த்தனத்துக்கு சொல்லி கொடுங்கள்,இளம் வயதிலேயே மத ச்சர்பின்மை மனதில் வலரும் இதுவும் ஒரு மஹா மந்திரமே,இதை ஜெபிப்பது பாவங்களையும் தோஷங்களையும் போக்கும்,வெற்றி தரும்.
2
ஆபத்துக்கள் விலக
சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும்.தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும்.
விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு

ஓம் ஹ்ரீம் யாம் கல்பயந்தினோரயக்ருத்யாம் க்ரூராம் வதுரமிவேஹ்ராம்தாம் ப்ரம்ஹணா அவநிர்ணுத்மப்ரத்யக் கர்த்தாரம் ச்சது

தினமும் காலையில் குளித்து விட்டு மனதில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை சொல்லவும்.

 3.**விளம்பரப்படுத்த வேண்டாம்
பக்தியை
விளம்பரப்படுத்தினால்
அது
உண்மையாகவே பிறரையும்
பக்திசெய்ய தூண்டும்
நல்ல நோக்கமுடயதாக
இருக்கட்டும்
**இதயம்
ஒரு குழந்தை
அதனை அன்பெனும்
 போஷாக்கால் செழிக்க செய்வோம்
***********************************
நண்பேண்டா
***********************************
*அன்பெனும்
தேன் தடவி வைத்திருக்கிறேன்
என்
இதயத்தில்
நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
*
கிருஸ்ணன் – குசேலன்
 சீத்தலை சாத்தனார் – பிசிராந்தையார்
 கர்ணன் – துரியோதனன்
 ஓம் - ?
 என்ன்னோடு – அந்த இடத்தை
 நிரப்ப யார்
 இருக்கிறீர்கள்?
*
*நண்பர்கள்
இதயமும் தேவைப்படுகிறது
என் அன்பு
அளவுகடந்தது
அதை அடைத்து வைக்க
ஒரு இதயம் போதாது
என்பதால்!
*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.
**
** நம் நண்பர்கள்தான்
நம் சொத்துக்கள்
விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**

***********************************************
நலாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்கு
உங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு          ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள்          குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்

மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள்          ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த    உலகை       மாற்றட்டும்.
உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.

 மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.
ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]
இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.
மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.
தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.

 எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.

 எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

 அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
-அன்புடன் ஓம் 8056156496


No comments:

Post a Comment