அன்பான காலை வணக்கம் நண்பர்களே
ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]
நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
அசைபோட 5 விஷயங்கள்
***********************
1.சிரிக்கலாம் வாங்க
*********************
காதலன்: என்னை காதலிக்கிறாயா கண்ணே?! காதலி: ஆமாம் அன்பே.. காதலன்: அப்ப.. எனக்காக இறந்து போவாயா கண்ணே..? காதலி: மாட்டேன்.. என்னுடையது இறவா காதல் அன்பே..
ஆசிரியர்: நேற்று ஏன்டா ஸ்கூலுக்கு வரலை? இனிமேல் முதல் நாளே லீவு சொல்லிடணும். மாணவன்: சரி சார். நாளைக்கு எனக்கு வயிற்று வலி சார். நாளைக்கு எனக்கு லீவு சார்!
ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனிடம் "எங்கப்பா ரொம்ப பயந்தான்கொள்ளிடா" "எப்படிடா சொல்லுறே?" "பின்னே என்னடா ரோடை க்ராஸ் பண்ணும் பொழுது என் கையை கெட்டியா பிடிச்சிக்கிறார்டா..."
*****************************************************************************
2.அழகே நலமா?
. கண்ணங்கள் உப்பி இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், வாயில் காற்றை நிறைத்து கண்ணங்களை உப்ப வைத்து 10 நொடிகள் இருக்கலாம். இவ்வாறு 10 முறை தினமும் செய்து வந்தால் கண்ணங்கள் புசுபுசுவென்று மாற ஆரம்பிக்கும்.
********************************************************************************
3.அன்பே நலமா?
இரண்டு காதுகளையும் உள்ளங்கைகளால் அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களால் எவ்வளவு அழுத்தமாக பிடிக்க முடியுமோ அவ்வளவு அழுத்தமாக பிடித்தபடி 25 வரை எண்ணவும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் காது கேட்கும் திறன் அதிகரிக்கும்.
****************************************************************************
4.ஆன்மீ கம்
1.ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இந்த மந்திரத்தை பிள்லைகளுக்கு நாம சங்கிர்த்தனத்துக்கு சொல்லி கொடுங்கள்,இளம் வயதிலேயே மத ச்சர்பின்மை மனதில் வலரும் இதுவும் ஒரு மஹா மந்திரமே,இதை ஜெபிப்பது பாவங்களையும் தோஷங்களையும் போக்கும்,வெற்றி தரும்.
2.காதில் பூ வைப்பது நல்லது
காதுக்குப்பின் துளசி வைப்பதனால் பெரும் பயனடைந்தனர் பண்டைய மக்கள்.
மனித உடலில் மிகக் கூடுதல் உறிஞ்சும் சக்தியுடையது காதுக்குபின்புறம் உள்ள பகுதி ஆகும். இதை விஞ்ஞானம் நிரூபித்திருக்கின்றது. துளசியின் மருத்துவ குணங்களை நாம் நன்கு அறிவோம். இந்த மருத்துவ குணங்கள் காதுக்குபின் உள்ள சருமம் வழியாக ஊடுருவிச் செல்லும். இதனால் அதிக நன்மை உண்டாகும்.
இதுவே பழங்காலத்து மக்கள் காதுக்குப்பின் துளசி இலையை சூடிவந்ததும், பின் சந்ததிக்கு அதைக் கற்பித்ததும் ஆகும்.
***********************************
நண்பேண்டா
***********************************
*
*அன்பெனும்
தேன் தடவி வைத்திருக்கிறேன்
என்
இதயத்தில்
நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
*
கிருஸ்ணன் – குசேலன்
சீத்தலை சாத்தனார் – பிசிராந்தையார்
கர்ணன் – துரியோதனன்
ஓம் - ?
என்ன்னோடு – அந்த இடத்தை
நிரப்ப யார்
இருக்கிறீர்கள்?
*
*நண்பர்கள்
இதயமும் தேவைப்படுகிறது
என் அன்பு
அளவுகடந்தது
அதை அடைத்து வைக்க
ஒரு இதயம் போதாது
என்பதால்!
*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.
**
** நம் நண்பர்கள்தான்
நம் சொத்துக்கள்
விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**
***********************************************
நலாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்கு
உங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள் குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்
மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த உலகை மாற்றட்டும்.
உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.
மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.
ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]
இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.
மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.
தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.
எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.
எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
-அன்புடன் ஓம் 8056156496
No comments:
Post a Comment