Friday 21 September 2012

நாம சஙீர்த்தனம் அல்லது நாம் பஜனை பாட சொல்லி


அன்பான காலை வணக்கம் நண்பர்களே

ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]
நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

 அசைபோட 5 விஷயங்கள்
 ***********************
1.சிரிக்கலாம் வாங்க
**********************
**காதல் வந்தா எஸ்.எம்.எஸ் அனுப்பு
வரலைன்னா?
உன் தங்கச்சி நம்பர அனுப்பு
**எல்லாம் சரி, இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா அதையெல்லாம் ஏத்துக்கமாட்டோம்.என்ன சார் அநியாயமா இருக்கு, அப்ப என் தலையில் முடிவளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?
**நீ எந்தச் சிகரெட்டைப் பிடிப்பாய்.மற்றவர்கள் கொடுப்பதை!
***உங்க பையன் கோவிலுக்குப் போனா அதிகமா பொய் பேசறானே, ஏன்?கோவிலுக்குள்ளே போனதும் அவன் மெய் மறந்துடுவான்.

 2.அழகே நலமா?
******************
முக பளபளப்புக்கு
******************
வெள்ளரிச்சாறு ஒரு ஸ்பூன், சந்தனப்பொடி ஒரு ஸ்பூன், கடலைமாவு ஒரு ஸ்பூன் எடுத்து மூன்றையும்  நன்கு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக மாறுவதை பார்க்கலாம்.  
********************************************************************************
3.அன்பே நலமா?
முருங்கை இலையை இடித்து சாறு பிழிந்து 20மில்லி அளவுக்கு சாறு எடுத்து அதனுடன் 10 கி மிளகை சேர்த்து சிறிது தேன் சேர்த்து குடித்து வர அதிகமான பீ.பி ரத்த அழுத்ததின் தொல்லை நீங்கும்
***********************************************
 ****************************************************************************
 4.ஆன்மீ கம்
வீட்டில் எப்போதும் துக்கமாகவெ இருக்கிறதா பல பிரச்சனைகளோ அல்லாடுகிறீர்களா அல்லது குழந்தை பேறு போன்ற நல்லதோரு காரியங்களை நடக்க வேண்டுமென்று உத்தேசித்திருக்கிறீர்களா சிவனடியார்கள்,அல்லது ஏதோ ஒரு பக்தர்கள் குழுவை கூப்பிட்டு நாம சஙீர்த்தனம் அல்லது நாம் பஜனை பாட சொல்லி அவர்களுக்கு விருந்து படைத்து இயன்ற தட்சனை ஆடை கொடுத்து அனுப்புங்கள் 16 வாரம் இப்படி செய்தால் வலிய மாந்தீகமே தொல்லை தந்தாலும் விதியே வாலாட்டினாலும் செல்லுபடியாகாது,நீங்களும் பய பக்தியுடன் கலந்து கொள்ளுங்கள்
*************************************************************************
 5.நல்மொழிகள்:
1.ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே காரியத்தில் கண்ணிருக்கனும் தாண்டவக்கோனே என்னதான் மனசு வெளியில அலைஞ்சாலும் காலை மாலை இரவு,பிறகு நெரம் கிடைக்கும்போதெல்லாம் ஜெபத்துல இருக்கட்டும்.
2.இதயம்
ஒரு குழந்தை
அதனை அன்பெனும்

போஷாக்கால் செழிக்க செய்வோம்
***********************************
நண்பேண்டா
***********************************
*அன்பெனும்
தேன் தடவி வைத்திருக்கிறேன்
என்
இதயத்தில்
நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
*நண்பர்கள்
இதயமும் தேவைப்படுகிறது
என் அன்பு
அளவுகடந்தது
அதை அடைத்து வைக்க
ஒரு இதயம் போதாது
என்பதால்!
*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.
**
** நம் நண்பர்கள்தான்
நம் சொத்துக்கள்
விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**

***********************************************
நலாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்கு
உங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள் குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்

மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த உலகை மாற்றட்டும்.
உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.

 மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.
ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]
இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.
மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.
தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.

 எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.

 எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

 அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
-அன்புடன் ஓம் 8056156496

No comments:

Post a Comment