Wednesday 5 September 2012





அன்பான காலை வணக்கம் நண்பர்களே
ஓம் கணேச சரணம் சரனம் கணேசா!

- அன்புடன் ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]
நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

அசைபோட 5 விஷயங்கள்
***********************
மூஷிக வாகன் மோதக ஹஷ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மகேஷ்வர புத்ர விக்கின விநாயக பாத நமஷ்தே!
**********************
2.அழகே நலமா?

விநாயகர் மூலிகைகளில்அழகுகுறிப்புகள் - 4
செம்பருத்தி பூ,பாதாம் பருப்பு இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பால் முகமாய் பளிங்கு முகமாய் பிரகாசிக்கும்

********************************************************************************
3.அன்பே நலமா?
ஆரோக்யம் தரும் விநாயகர் மூலிகை
அறுகம்புல் - 3
செம்பருத்தி பூ,பாதாம் பருப்பு இரண்டையும் அரைத்து பாலில் காய்த்து குடித்து வந்தால்தால் இளமை ஊஞ்சலாடும்,பாட்டுப்பாடும்,சந்தோஷத்தில் கவிதை எழுதும்
****************************************************************************
4.ஆன்மீ கம்
இடக்கையில் இரும்பையும் வலக்கையி செம்பையும் வைத்து ஓம் மஹா கணபதயே நமஹா,ஓம் களத்திர தோஷ நிவாரனாய நமஹா என்று 48 நாட்கள் 108 தரம்தொடர்ந்து ஜெபம் செய்து இறுதி நாளில் தென் கிழக்கு பார்த்து நின்று ஓம் சித்தீசாய நமஹா[இதுவும் கணபதி நாமமே] என்று 9 தரம் ஜெபித்து பூமியில் எங்காவது வெற்று நிலத்தில் எள்,கோதுமை,துவரை மூன்றையும் கலந்து இந்த தானியத்தை வைத்து ஜெபிக்கப்பட்ட இரும்பையும் செம்பையும் சேர்த்து தலையை சுற்றி கீழே வைத்து விட்டு திரும்பி பாராமல் நடந்து வீட்டுக்கு வந்ததும் குளித்து விடவும்,திருமண தோஷம்,கணவன் மனைவி சிக்கல் விலகும்,
*************************************************************************
5.நல்மொழிகள்:
தொடர்ந்து
அடி எடுத்து வை
பயணம் வசப்படும்

தொடர்ந்து
ஜெபம் செய்
தெய்வம் வசப்படும்
***********************************
நண்பேண்டா
***********************************
*அன்பெனும்
தேன் தடவி வைத்திருக்கிறேன்
என்
இதயத்தில்
நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
*நண்பர்கள்
இதயமும் தேவைப்படுகிறது
என் அன்பு
அளவுகடந்தது
அதை அடைத்து வைக்க
ஒரு இதயம் போதாது
என்பதால்!
*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.

***********************************************
நலாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்கு
உங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள் குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்

மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த உலகை மாற்றட்டும்.
உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.

மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.
ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]
இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.
மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.
தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.

எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.

எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
-அன்புடன் ஓம்
 

No comments:

Post a Comment