Thursday 13 September 2012



அன்பான காலை வணக்கம் நண்பர்களே
ஓம் கணேச சரணம் சரனம் கணேசா! 

- அன்புடன் ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]
நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

அசைபோட 5 விஷயங்கள்
***********************
ஸ்ரீ மஹா கனபதி மங்கள மாலிகா ஸ்தோத்ரம்
[சகல மங்கலம் உண்டாகும்,இடையூறு விலகும்,சாபம் அகலும்]
8.மஹாகாயாய பீமாய மஹாசேனாக்ர ஜன்மனே
த்ரிபுராரி வரேத்த்தர்த்ரே ஸ்ரீ கணேசாய மங்களம்!!
ஓம் மஹா சரீரம் படைத்தவனேபோற்றி
ஓம் பயஙரமானவனே போற்றி
ஓம் சுப்ரமணியனுக்கு முன் பிறந்தவனே போற்றி
ஸ்ரீ பரமசிவனிடம் வரம் பெற்றவனே போற்றி

தங்களுக்கு மங்களம்
- தொடரும்.
**********************
2.அழகே நலமா?
வெள்ளை எள்ளை ஊறவைத்து அரைத்து தயி கலந்து பூசுங முகத்துக்கு ஷைனிங் கூடும்
********************************************************************************
3.அன்பே நலமா?
சிற்நீர் சரியாக வராமல் அவதிப்படுபவர்கள் முடக்கத்தான் கீரையுடன்சதகுப்பை சிறிது சேர்த்து கஷாயமாக்கி சாப்பிச சரியாகும்.
****************************************************************************
4.ஆன்மீ கம்
ஏசு அல்லா ஹரஹர ஓம்
ராதே
க்ருஷ்ண கணேசா
ஜெயெஜெய ஓம் ,கை தட்டி பஜனை பாட அருமையான பாடல் இது.
*****
+++ கணபதி ஹோமம் எல்லாத்துக்கும் நன்மை அளிக்கும்.உங்கள் எல்லாத்த் தடைகளையும் களைந்து காரிய சித்தி தரும்
*************************************************************************
5.நல்மொழிகள்:
எதுவும் தவறில்லை அது நம்மையும் பிறரையும் பாதிக்காதிருக்கும் வரை
***********************************
நண்பேண்டா*****
***********************************
*அன்பெனும்
தேன் தடவி வைத்திருக்கிறேன்
என்
இதயத்தில்
நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
*நண்பர்கள்
இதயமும் தேவைப்படுகிறது
என் அன்பு
அளவுகடந்தது
அதை அடைத்து வைக்க
ஒரு இதயம் போதாது
என்பதால்!
*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.

***********************************************
நலாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்கு
உங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள் குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்

மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த உலகை மாற்றட்டும்.
உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.

மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.
ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]
இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.
மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.
தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.

எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.

எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
-அன்புடன் ஓம்

No comments:

Post a Comment