Tuesday 11 September 2012



அன்பான காலை வணக்கம் நண்பர்களே 1
ஓம் கணேச சரணம் சரனம் கணேசா!

- அன்புடன் ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]
நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

 அசைபோட 5 விஷயங்கள்
 ***********************
ஸ்ரீ மஹா கனபதி மங்கள மாலிகா ஸ்தோத்ரம்
[சகல மங்கலம் உண்டாகும்,இடையூறு விலகும்,சாபம் அகலும்]
6. ப்ருச்நி ச்ருங்கா யஜிதாய க்ஷிப்ராபீஷ்ட்டார்த்த தாயினே
ஸித்தி புத்தி ப்ரமோதாய  ஸ்ரீ கணேசாய மங்களம்!!
ஓம்  ஒளி வீசும் தந்தத்தை உடைய வனே போற்றி
ஓம் யாராலும் ஜெயிக்க முடியாதவனே போற்றி போற்றி
ஓம் விரைவில் வரம் தரும் வள்ளலே போற்றி
ஓம் ஸித்தி புத்தி என்ற் இரு மனிவியர்களுக்கும்சந்தோஷம் அளிப்பவனே போற்றி
ஓம் னே போற்றி
தங்களுக்கு மங்களம்
- தொடரும்.
**********************
 2.அழகே நலமா?
ஆலிவ் எண்ணெய் எடுத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் ,தோளில் உள்ள சுருக்கங்கள்,மரு போன்றவை நீங்கி விடும்.
 ********************************************************************************
3.அன்பே நலமா?
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
****************************************************************************
 4.ஆன்மீ கம்
மங்கல மாலிகா ஸ்தோத்திரம் தொடர்ந்து படித்தால் 1,5,9 என்கிற திரி கோண் ஸ்தானத்தில் கேது இருந்தால் அறம் ஓதும் அந்தணர் சாபம்,தெய்வ சாபம்,புத்திர தோஷம்,காரியத்தடை,ஆரோக்ய கேடு,காரியத்தடை இருக்கும்,இந்த தடையை இந்த ஸ்தோத்திரம் படிப்பதால் விலகும்,சர்வ மங்கலமும் உண்டாகும்.
*************************************************************************
 5.நல்மொழிகள்:
எதுவும் தவறில்லை அது நம்மையும் பிறரையும் பாதிக்காதிருக்கும் வரை
***********************************
நண்பேண்டா
***********************************
*அன்பெனும்
தேன் தடவி வைத்திருக்கிறேன்
என்
இதயத்தில்
நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
*நண்பர்கள்
இதயமும் தேவைப்படுகிறது
என் அன்பு
அளவுகடந்தது
அதை அடைத்து வைக்க
ஒரு இதயம் போதாது
என்பதால்!
*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.

***********************************************
நலாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்கு
உங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு          ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள்          குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்

மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள்          ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த    உலகை       மாற்றட்டும்.
உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.

 மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.
ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]
இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.
மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.
தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.

 எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.

 எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

 அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
-அன்புடன் ஓ

No comments:

Post a Comment