Thursday 20 September 2012

மாதவிலக்கு வலி நீங்க முருங்கை ஈர்க்கு சூப்

அன்பான காலை வணக்கம் நண்பர்களே
ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்

ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]
நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒ
ரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

அசைபோட 5 விஷயங்கள்
***********************
1.சிரிக்கலாம் வாங்க
**********************
** ஏண்டா மாமு பேயடிச்ச மாதிரி இருக்கே?இல்லடா மாமாவெல்லக்காரிகிட்ட உனக்கு என வெணும்னு ஆசையா கேட்டா ‘புது தொடப்பகட்டை’ வேனும்னு சொல்லிட்டா
**சாரி சார் இது ராங் நம்பர் யேன் கரெக்ட் நம்பர் வச்சிக்காமா ராங் நம்பர் வெச்சிருக்கீங்க?
ம்???
**உங்க் ஓட்டலுக்கு மட்டும் யேங்க புதன் கிழமை லீவு விட்டுருக்கிங்க?அதுவா அன்னிக்குத்தான் ப்ளேட் எல்லாம் கழுவுவோம்

2.அழகே நலமா?
******************
முக பளபளப்புக்கு
******************
முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ (பன்னீர் ரோஜா)இதழ்களை அரைத்து, அதோடு பால், பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் பளபளப்பாக மாறுவதை காணலாம்.
முக்த்தில் முடி உதிர
*********************
மஞ்சள், கோதுமை மாவு, நல்லெண்ணை சம அளவு கலந்து முகத்தில் தடவினால் ரோமங்கள் உதிர்ந்துவிடும்.
********************************************************************************
3.அன்பே நலமா?
மாதவிலக்கு வலி நீங்க முருங்கை ஈர்க்கு சூப்
***********************************************
முருங்கை இலைகளை உதிர்த்த பின் மின்ச்ஜி இருக்கும் காம்ம்பு குச்சிக்கு ஈர்க்கு என்று பெயர்,நறுக்கிய ஈர்க்கு 2 கைப்பிடி எடுத்து சூப்புகுடிக்க எந்த அளவுக்கு வேண்டுமோ அந்த அளவுக்கு நீர் சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு அதனுடன் தேவையான வெங்காயம்,சீரகம்,மிளகு,,நெய்,தேவையான அளவு உப்பு கூட்டிசூப்பை போல பருகி வர அந்த நேரத்தில் வருகிற வயிற்று வலி குறையும்
****************************************************************************
4.ஆன்மீ கம்
மனசோ உடம்போ டல்லாருக்கா போய் அரச மரத்திடமோ முருங்கை மரத்திடமோ அல்லது தலவிருக்‌ஷத்திடமோ அமர்ந்தோ தொட்டுக்கொண்டு நின்றோ கண்ணை மூடி ஃபீல் பண்ணுங்க உங தீய அதிர்வுகளை எடுத்துகொண்டு நல்ல ஆற்றலை தருவதாக,இதையே ஒரே மரத்திடம் பழகி வந்தால் அந்த எனர்ஜி சீக்கிரம் சார்ஜாக பழகும்,புது அறிவு,புது சக்தி புது அமைதி கிடைக்கும்.எல்லாம் இறைவனின் அம்சம் என்றெண்ணினால் மரம் பேசுவது போல வேறெதுவெம் பேசாது.அன்பு செய்யுங்கள் அதனோடு.
*************************************************************************
5.நல்மொழிகள்:
1.ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே காரியத்தில் கண்ணிருக்கனும் தாண்டவக்கோனே என்னதான் மனசு வெளியில அலைஞ்சாலும் காலை மாலை இரவு,பிறகு நெரம் கிடைக்கும்போதெல்லாம் ஜெபத்துல இருக்கட்டும்.
2.இதயம்
ஒரு குழந்தை
அதனை அன்பெனும்

போஷாக்கால் செழிக்க செய்வோம்
***********************************
நண்பேண்டா
***********************************
*அன்பெனும்
தேன் தடவி வைத்திருக்கிறேன்
என்
இதயத்தில்
நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
*நண்பர்கள்
இதயமும் தேவைப்படுகிறது
என் அன்பு
அளவுகடந்தது
அதை அடைத்து வைக்க
ஒரு இதயம் போதாது
என்பதால்!
*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.
**
** நம் நண்பர்கள்தான்
நம் சொத்துக்கள்
விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**

***********************************************
நலாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்கு
உங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள் குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்

மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த உலகை மாற்றட்டும்.
உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.

மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.
ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]
இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.
மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.
தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.

எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.

எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!
-அன்புடன் ஓம் 8056156496

No comments:

Post a Comment