Sunday 30 December 2012

பெண் எனும் தெய்வம்


பெண்கள் நலம் காப்போம்
புலியை முறத்தால் அடித்து புரமுத்கிட்டு ஓடசெய்தவள் நீ அஞ்சாதே உன்னுடைய பதற்றம் உன்னுடைய புற உறுப்புகள்தான் அதை மறந்துவிடு ,உன் ஆன்மா பாலினம் தாண்டிய மகா சக்தி,கழுதைகள் உன்னை தீண்டும்போது நீ உன்னை பெண் என்று நினைத்தால் பலகீனப்படுவாய் மகா சக்தி என்று எண்ணிப்பார் கட்டுக்கடங்கா சக்தி பெருகும் உடலை தீண்டி உன் கற்பை பாழ்படுத்த முடியாது ,இதை சொல்லியே ஆண் இனம் உன்னை அடிமை படுத்தி அச்சப்படுத்தி வைத்திருக்கிறது,இனி எந்த பெண்ணும் புற உறுப்புகளை எண்ணி யாருக்கும் அஞ்சவும் வேண்டாம் அடிமைப்பட்டு கிடக்கவும் வேண்டாம்,பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்கள் ,விபசார விடுதிகள்,புகைப்படங்கள்,இணையத்தில் உலவும் கேடுகெட்ட கதைகள், எல்லாவற்றையும் எதிர்ப்போம்,அம்மாவை பற்றி எதாவது புகைப்படம் தேடினால் ஒரு பெண்ணுக்கு பிறக்காமல் பன்றிக்கு பிறந்த கேடுகெட்ட நாய்கள் அரங்கேற்றிய அம்மா மகன் கதைகளும் அண்ணன் தங்கை கதைகளும் முன்னே வந்து நிற்கின்றன.இதை பார்க்கின்றவர்கள் புகார் கொடுங்க,மறுத்து கமென்ட் கொடுங்க,பெண்காவலர்கள் படிக்க நேர்ந்தால் தயவுசெய்து நடவடிக்கை எடுங்க,இளம் பிள்ளைகள்கூட இணையத்தை படிக்கிறார்கள்.பன்னிக்கு பிரந்தவனே சத்தியமாய் சொல்கிறேன் நீ உன் வம்சம் எல்லாவற்றிற்கும் அது சாபம்தான்,காமம் இழிவானதல்ல,அதில் அடக்கு முறையும் ஆபாசமும் வியாபாரமும் வெறியூட்டுதளும்தான் இழிவானது,இன்றைய வன்முறைக்கு இணையம் 75% காரணம் அரசு இணையத்தை கவனிக்க வேண்டும் 

ஆன்மா

நீ உன் ஆன்மாவை அவமதிக்கிறாய் ,பிறருடன் உன்னை ஒப்பிடும்போது
- அன்புடன் R.P.OM

Saturday 29 December 2012

காம கழுதைகளை

தீக்குச்சியை கொளுத்தி கண்ணில் போடு
போக பொருளாய் மட்டுமே எண்ணும்ம் கயவர் கண்ணில்
அரை குறை ஆடை அணிந்து ஆசையை தூண்டாதே
சீருடை அணிந்து தாய்மையை தூண்டு
கத்தியை எடுத்துக்கொண்டு போ பெண்ணினமே
புத்தியில்லாத சில காம  கழுதைகளை குத்தி கிழிக்க
சட்டமாம் சட்டம் இட ஒதுக்கீடு கேட்காதே
சரி பாதி கேள்
ஒழுங்கீனர்களை கேள்விகேட்க உன்னிடமும்
ஒழுங்குமுறை இருக்கட்டும்
ஆடை எதற்கு மானத்தை காக்க
மானத்தை விலை பேச அல்ல
அன்பை விதைக்கும் பெண்ணினத்திடம் வம்பை விதைக்காதே
எலும்பை முறிக்கும் வித்தை பயின்றவர்கள் என்பதை கவனத்தில் வை
தற்காப்பு கலை என்பது பெண்களுக்கு கட்டாய சட்டமாக்கு அரசாங்கமே
யோசனையே வேண்டாம் கயவர்களின் கழுத்துக்கு கயிறு மாட்ட
அருமை மிகு பெண் இனமே இந்தியாவில் நடப்பது ஆட்சியே அல்ல
அமர்க்களம் ,இனியாவது நாட்டின் தலை எழுத்தை உன் ஓட்டு போக்கிஷத்தால் மாற்றிக்காட்டு
பெண்களுக்கென தனிபெருந்து எப்போதும் இயங்கட்டும் விடிய விடிய
ஜான்சி ராணி

Friday 28 December 2012

குணமடையும்



மகனே பொடியை கஷ்டப்பட்டு நிறுத்தியே ஆகவேண்டும் உன் மூளை நரம்பு செயலிழக்கும் நிலையில் இருக்கிறது பிறகு பக்கவாதம் வரும்.நுரையீரல் புற்று நோய்க்கு ஆயத்தமாகிறது தேகம்.அஞ்ச வேண்டாம் 
மூச்சுக்குழல் மற்றும் ஆஸ்துமா நோய் குணமடையும்.
இலையை உலர்த்தி சூரணம் போல் தயாரித்து 10 குன்றிமணி எடை வீதம் தேனில் கலந்து கொடுத்து வந்தால் இருமல், இரைப்பு, கபம் முதலியவை குணமடையும்.மூச்சுக்குழல் மற்றும் ஆஸ்துமா நோய் குணமடையும்.

மகனே புருஷோத்தமா  பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 - 5 கிராம் அளவு பசும் நெய்யில் 48 நாள் காலை, மாலை சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்.

இந்த இலையின் பொடியை மூக்கில்பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனேகுணமடையும். . வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.


மகனே புருஷோத்தமா  பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 - 5 கிராம் அளவு பசும் நெய்யில் 48 நாள் காலை, மாலை சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்.
அங்காடியில் போடி வாங்க வேண்டாம்.
அவசியம் வியாழன் அன்று விரதம் இருக்க வேண்டும் பஞ்ச வர்ண திரி கொண்டு 5 தீபம் வியாழன் அன்று போடவேண்டும் நலேன்னை தீபம்,நீயும் முத்திரை செய்ய ஆரம்பித்துவிடு ,வேப்பிலையை தேங்காயில் அரைத்து தினமும் தேய்த்து குளிக்க வேண்டும் அலட்சியம் செய்யாதே நான்  எதற்கும் பொறுப்பாக மாட்டேன்

மகளே  அடிக்கடி  தியானமமும் பிரணவ ஜெபமும்   முக்கியம் முத்திரை முக்கியம் தீக்ஷா மந்திரம் முக்கியம் காலையில் இதையெல்லாம் முடித்தபிறகு

,மூல மந்திரம் ,அம்மா ,இடாயி, வாணி எல்லாம் ஒரு முறை சொன்னால் போதும் [108]

நலம் பலம் வளம் இரவில் குடும்பத்துடன் சொல்லவும் பின்பு தியானம் செய்துவிட்டு படுக்கவும் ,த்யானத்திற்கான மந்திரம் அனைவருக்கும் ஓம் தான்



Monday 24 December 2012

names

ஜகதா - உலகம்
ஜனனி - அம்மா
ஜலஜாக்ஷி - லட்சுமி
ஜெயவர்தனி - வெற்றிகளிப்பை வழங்குபவள்
ஜானவ் - கங்கை
ஜா னவிகா  - கங்கை ஜானிகா - அம்மா
ஜாஜ்வல்யா - பிரகாசமானவள்
ஜாஜி - மல்லிகை
ஜீவிகா - தண்ணீர்
ஜன் யா  - உயிர்,வாழ்க்கை
ஜயப்ரதா - வெற்றி ஒளி
ஜியா - இனிய ஹ்ருதயம்


Sunday 23 December 2012

om

ஓம் 

தன்வந்திரீ



ஓம் 
ஆதி வைத்யாய வித்மஹே
ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி
தந்நோ தன்வந்திரீ ப்ரசோதயாத்.

மந்திர தோத்திரம்

2

Saturday 22 December 2012

sarvam vinayagam

துவக்க பிரணவ விநாயக வழிபாடு - 4
***************************************
ஓம் ஓம் விநாயகா
ஓம் மனோன்மணி விநாயகா
ஓம் குரு விநாயகா
ஓம் கணபதி விநாயகா

 சர்வ சித்த விநாயக பிரணவ வழிபாடு - 25
**********************************
ஓம் ஆதி  பிரணவ கணபதி விநாயகா
ஓம் ராம ராம கிருஷ்ண கிருஷ்ண  சிவ சைதன்ய விநாயகா
ஓம் சொர்ணசாமி விநாயகா
ஓம் அகத்திய  விநாயகா
ஓம் அகப்பேய்  விநாயகா
ஓம் ஔவை  விநாயகா
ஓம் கருவூரார்  விநாயகா
ஓம் காகபுஜண்ட  விநாயகா
ஓம் குதம்பை  விநாயகா
ஓம் கொங்கணவ    விநாயகா
ஓம் கோரக்கர்   விநாயகா
ஓம்  சட்டை முனி  விநாயகா
ஓம் சிவா வாக்ய  விநாயகா
ஓம் சுகபிரம்ம  விநாயகா
ஓம் சுந்தரானந்த  விநாயகா
ஓம் தன்வந்தரி  விநாயகா
ஓம் திருமூல  விநாயகா
ஓம் தேரையர்  விநாயகா
ஓம் நந்தி  விநாயகா
ஓம் பதஞ்சலி  விநாயகா
ஓம் பாம்பாட்டி  விநாயகா
ஓம் போகர் முனி  விநாயகா
ஓம்  மச்ச முனி  விநாயகா
ஓம் வால்மீகி  விநாயகா
ஓம் சர்வ சித்த விநாயகா

சர்வதேவதா பிரணவ விநாயக வழிபாடு - 11
********************************************

ஓம் குலதேவதா விநாயகா
ஓம் பிரம்ம  விநாயகா
ஓம் விஷ்ணு விநாயகா
ஓம் மகேஷ்வர  விநாயகா
ஓம் சரஸ்வதி  விநாயகா
ஓம் லக்ஷ்மி  விநாயகா
ஓம் சக்தி  விநாயகா
ஓம் ஷண்முக  விநாயகா
ஓம் ஜெய மாருதி விநாயகா
பித்ரு தேவதா விநாயகா
ஓம் சர்வதேவதா  விநாயகா


பஞ்ச பூத பிரணவ விநாயக வழிபாடு - 5
***********************************

ஓம் வான்  விநாயகா
ஓம் வளி  விநாயகா
ஓம் அனல்  விநாயகா
ஓம் நீர்  விநாயகா
ஓம் மண்  விநாயகா

அஷ்ட திக்கு பாலக பிரணவ விநாயக வழிபாடு -8
***********************************************

ஓம் இந்திர  விநாயகா 
ஓம் அக்னி  விநாயகா 
ஓம் எம விநாயகா 
ஓம் நிருதி  விநாயகா 
ஓம் வருண  விநாயகா 
ஓம் வாயு  விநாயகா 
ஓம் குபேர  விநாயகா
ஓம் ஈசான்ய  விநாயகா 

நவக்ரஹ பிரணவ விநாயகர் வழிபாடு -9
****************************************
ஓம் சூர்ய  விநாயகா 
ஓம் சுக்ர  விநாயகா 
ஓம் சந்த்ர  விநாயகா
ஓம்  அங்காரக   விநாயகா 
ஓம் ராகு  விநாயகா 
ஓம் சனீஷ்வர  விநாயகா 
ஓம் கேது  விநாயகா 
ஓம் குரு  விநாயகா 
ஓம் புத  விநாயகா 

நக்ஷத்திர பிரணவ விநாயகர்  வழிபாடு - 27
******************************************
ஓம்அஷ்வினி  விநாயகா 
ஓம் பரணி  விநாயகா 
ஓம் கிருத்திகை  விநாயகா 

ஓம் ரோகினி  விநாயகா 
ஓம் மிருக சீர்ஷ விநாயகா
ஓம் திருவாதிரை  விநாயகா

ஓம் புனர்பூச   விநாயகா
ஓம் பூச  விநாயகா
ஓம் ஆயில்ய  விநாயகா

ஓம் மக விநாயகா
ஓம் பூர  விநாயகா
ஓம் உத்திர  விநாயகா

ஓம் ஹஸ்த  விநாயகா
ஓம் சித்திரை  விநாயகா
ஓம் சுவாதி  விநாயகா

ஓம் விசாகம்   விநாயகா
ஓம் அனுஷம்  விநாயகா
ஓம் கேட்டை  விநாயகா

ஓம் மூல  விநாயகா
ஓம் பூராட  விநாயகா
ஓம் உத்திராட  விநாயகா

ஓம் திருவோண  விநாயகா
ஓம்  அவிட்ட  விநாயகா
ஓம் சதய  விநாயகா

ஓம் பூரட்டாதி  விநாயகா
ஓம் உத்திரட்டாதி  விநாயகா
ஓம் ரேவதி  விநாயகா

13 உலக தத்துவ பிரணவ விநாயகர் வழிபாடு
**********************************************
ஓம் சொல்  விநாயகா
ஓம் செயல்  விநாயகா
ஓம் சிந்தனை  விநாயகா

ஓம் நடை  விநாயகா
ஓம் உடை  விநாயகா
ஓம் பாவனை  விநாயகா
ஓம் நடிப்பு  விநாயகா

ஓம் உடல்  விநாயகா
ஓம் மன  விநாயகா
ஓம் ஆன்ம  விநாயகா

ஓம் உடைமைகள் விநாயகா

ஓம் உறவுகள்  விநாயகா
ஓம் தொடர்புகள்  விநாயகா

பன்னிரு ராசி சக்கர விநாயகர் வழி பாடு
**************************************

ஓம்  விருசிக  விநாயகா
ஓம் தனுசு  விநாயகா
ஓம் மகர   விநாயகா
ஓம் கும்ப  விநாயகா
ஓம் மீன விநாயகா
ஓம் மேஷ  விநாயகா
ஓம் ரிஷப  விநாயகா
ஓம் மிதுன  விநாயகா
ஓம் கடக  விநாயகா
ஓம் சிம்ம  விநாயகா
ஓம் கன்னி  விநாயகா
ஓம் துலாம்  விநாயகா


ராஜ உறுப்புகள் பிரணவ விநாயக வழிபாடு -8
*********************************************

ஓம் மூளை   விநாயகா
ஓம்  நேத்ர விநாயகா
ஓம் நுரையீரல்  விநாயகா
ஓம் ஹ்ருதய  விநாயகா
ஓம் வயிறு  விநாயகா
ஓம்   கல்லீரல்  விநாயகா
ஓம் மண்ணீரல்  விநாயகா
ஓம் சிறுநீரக  விநாயகா



7சக்கர பிரணவ விநாயகர் வழிபாடு
*********************************
ஓம் மூலாதார  விநாயகா
ஓம் சுவாதிஷ்டான  விநாயகா
ஓம் மணி பூரக  விநாயகா
ஓம் அனாஹத  விநாயகா
ஓம் விசுத்தி  விநாயகா
ஓம் ஆக்ஞா   விநாயகா
ஓம் சகஸ்ரஹார  விநாயகா

குடும்ப பிரணவ விநாயகர் வழிபாடு
**********************************
அம்மா மந்திரத்தை சொன்னவரை செய்தால் போதும் அதற்கு மேல் பிரணவத்தை தியானம் செய் ,தியானம் அதிகரி ,தானம் அதிகரிக்க அதிகரிக்க எல்லாம் வசமாகும் .








Friday 21 December 2012

nalam balam valam



 அன்பான காலை வணக்கம் நண்பா
நாமும்  இந்த உலகமும் உலகத்தில் உள்ள அத்தனை உயிர்களும்
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
தியானம் பண்ணுங்க யோகா பண்ணுங்க காபி டி குடிக்கதிங்க ,மது அருந்தாதிங்க ,காய் கரி,பழ ஜூ ஸ் சாப்பிடுங்க,மூலிகை டி சாப்டுங்க எல்லோரும் நல்லாருங்க  

Thursday 20 December 2012

OMALAYA RAJA URUPU DHYAANAM


meditation of king parts seynga
raaja uruppugal - lungs,heart,liver,spleen,kiney

5 நிமிடம் ஒரு உறுப்புக்கு அங்கே விநாயகரை நிறுத்தி அப்பாகமும் கடவுளாக எண்ணி திரும்ப திருபா மனதுக்குள் பொறுமையா கண்ணை மூடி சொல்லி தியானம் பண்ணுங்க அலாரம் வெச்சிக்குங்க
ஓம் நுரையீரல் விநாயகா

ஓம் நலமாக இருக்கிறோம்
பலமாக இருக்கிறோம்
வளமாக இருக்கிறோம்
ஹ்ருதய விநாயகா

ஓம் நலமாக இருக்கிறோம்
பலமாக இருக்கிறோம்
வளமாக இருக்கிறோம்

கல்லீரல்  விநாயகா

ஓம் நலமாக இருக்கிறோம்
பலமாக இருக்கிறோம்
வளமாக இருக்கிறோம்

மண்ணீரல்  விநாயகா

ஓம் நலமாக இருக்கிறோம்
பலமாக இருக்கிறோம்
வளமாக இருக்கிறோம்
சிறுநீரக  விநாயகா

ஓம் நலமாக இருக்கிறோம்
பலமாக இருக்கிறோம்
வளமாக இருக்கிறோம்
- அன்புடன் ஓம் 
எங்கள் யோகா மைய த்யானத்தில் இதுவும் ஒன்று நலம் பெறுங்கள்,நொயீலிருந்து விடுபடுவீர்கள் . 8056156496

எதிர் வீட்டு ஜன்னல்ல ஒரு பொண்ணு

பால நாராயணன் :வயசாயிட்ட ஒரு கவலை இல்ல 
ஜே.பி கிருபா : என்ன கவலை 
நாகு தம்பி : அதான்ம்பா காலைல எழுந்திருசிகஷ்டப்பட்டு பல்லு தேக்க வேநாம்ல


மாதர் சங்க தலைவி ஜாய்சி : மகேஸ்வரி நம்ம சங்கத்துக்கு பெருமை தேடி தந்துட்ட சமையல் போட்டில முதல் பரிசு வாங்கி ,எப்படி இவ்வளவு அருமையா செய்றிங்க 
மகேஸ்வரி : அது வந்து மேடம் வீட்ல கணவர் செய்யும்போது உன்னிப்பா கவனிச்சேன் அவ்வளவுதான்


நடிகர் சந்தானம் :உன்னாலதாண்டா என்ன பொலிஸ் புடிச்சாங்க ஏண்டா அங்க மயங்கி விழுந்த
நடிகர் கார்திக்க்: இல்ல மச்சி எதிர் வீட்டு ஜன்னல்ல  ஒரு பொண்ணு திடீர்னு மேக்கப் இல்லாம வந்து நின்னுடுச்சி 

Tuesday 18 December 2012

தன்வந்தரி vazipaadu

1

anbaana kaalai vanakkam nanba pray pannunga dhyaanam pannunga coffe tea saapdadhinga

அன்பாயிருப்போம் 
அன்பையே விதைப்போம்!
ஒற்றுமையாய் இருப்போம் 
எல்லோர் உயர்வுக்கும்
 பாடுபடுவோம்!
நட்பாயிருப்போம் 
நன்மைக்கே பாடுபடுவோம் ! 
- அன்புடன் R.P.OM

மிக்க நன்றி உங்கள் நட்புக்கு 

அம்மா

எந்த வார்த்தையிலும்
இல்லாத 
தெய்வீகம் ஆனந்தம்
அக்கறை ஆறுதல் 
இந்த வார்த்தையில்
 இருக்கிறது 
அம்மாஎன்ற 
இந்த வார்த்தையில் 
இருக்கிறது

- அன்புடன் R.P.OM

விட்றா

நீதிபதி ஜெயச்சந்திரன் : வரதட்சனை கேட்டு உங்க மனைவியை கொடுமை படுதிநீன்களா ஓம்
குற்றவாளி ஓம் : ஆமாங்கய்யா ...இவ கூட குடும்பம் நடதுரதவிட ஜெயிலுக்கு போலாம்னு முடிவு பண்ணிட்டேன் அய்யா

நீதிபதி ஜெயச்சந்திரன் : என்னடா அங்க முனுமுனுங்கற தொலைச்சிடுவேன் தொலச்சி
ஓம் : அய்யா செத்த நேரம் முணுன்னதுக்கெ தொலசிடுவேன்னு திட்ரீன்களே ,24 மணி நேரத்துல ஒரு மணி நேரம் கூட விடாம முனுமுனுகுரா,தூங்கிட்டா எழுப்பி மடிலயில படுக்க வெச்சி காதுல முனுமுனுக்குரா அய்யா

ஜெயச்சந்திரன் : அப்ப சரி நீ ஜெயிலுக்கு பொய் ரெஸ்ட் எடுக்கலாம்

ரத்னா ஷேன் : ஏண்டா தம்பி கல்யாணத்துக்கு போயிட்டு சோகமா வர்ற

ஓம் : ஜோசியர் சொன்னாரு பச்சை கலர் ராசின்னு,நா குறி வெச்சிருந்த பச்சை கலர் செருப்பை எவநோ  சுட்டுட்டு போயிட்டான்க்கா திருட்டு பசங்க ,நீல கலர் செருப்புதான் கெடச்சிச்சு அக்கா அதான் வருத்தம்

ரத்னா ஷேன் :விற்றா தம்ம்பி இந்த வாரத்துல வரிசையா முகூர்த்தம்தான்

புஜ்ஜிம

Monday 17 December 2012

நெருங்கி வா

கடைக்கு வந்த  ஓம்  : நெருங்கி வா 
கடைக்கார பெண் வந்தனா : மிஸ்டர் ,மரியாதையா பிஹெவ் பண்ணுங்க 
ஓம் : ஐயோ பதராதிங்க க்ளோசப் பேஸ்ட் ஒன்னு கொடுங்கன்னு தமிழ்ல கேட்டேன் .

ஸ்ரீ ஷா :அந்த பிச்சைகாரன் லட்சியவாதின்னு எத வெச்சி சொல்ற ஓம் 
ஓம் :உலக கோப்பையில பிச்சை எடுக்கனும்னு சொல்ரானே ஸ்ரீ 

சுந்தரம் பாலா : தூங்கும்பபோ து ஏன் ஓம் தலை மாட்டுல பெரம்பு வெச்சிருக்க 
ஓம் : கனவுல வர்ற சில வயசான நடிகைங்கள விரட்டதான் 

Sunday 16 December 2012

ஓம்

டாக்டரம்மா லலிதா யுவராஜ் : உங்க உடம்புக்கு என்னங்க ?
புலவர் ஓம் : ஒரு மாத்திரை சப்தமா பேசுங்க காது கேக்கமாட்டேங்குது 

டெய்லர் ஓம் : என்னடா அந்த ஆளு கையில கத்தரிகோல் சீபுமா நிக்குறான் 
அசிஸ்டன்ட் நாகு தம்பி : ஓம் நா நீங்க தானே கட்டிங்க மாஸ்டர் வேணும்னு கேட்டிங்க 

ஓம் : ஏன் புஜ்ஜிமா சாம்பார்ல*சால்ட்* அதிகமாருக்கு
புஜ்ஜிமா புவனேஸ்வரி : அதுவா ஓம் உன்னோட ஜோக்க படிசிகிட்டே *அசால்ட்டா*  இருந்துட்டேன் ப் 
ஒரு பச்சை
குழந்தையை போல 
ஆராய்கிறேன் 
உன் 
அழகு 
திருமுகத்தை 

Saturday 15 December 2012

சீன நாணயங்கள்

ஓம்  :யாரங்கே என்று கை தட்டினால் ஒரு பதிலும் வரமாட்டேங்குது மந்திரியரே
கதிர்வேல் : 8 மாச சம்பள பாக்கிய தீர்த்துவிட்டு மறுபடியும் சவுண்டு விட்டு பாருங்களேன் மந்திரியாரே

மகேஸ்வரி: ஏண்டி ஸ்டேஷன்ல  திருடர்கள் ஜாக்ரதைன்னு  இருக்குறவங்க சிலபேர் படம் மட்டும் கலர்ல இருக்கு
அன்புள்ள சிநேகிதி :அதுவாடி மாமூல் கொடுக்ரவங்க படம் மட்டும் கலர்ல வைப்பாங்க

ரமேஷ் தேவ கோட்டை : டாக்டர் இந்த பையனை நாய்  கடிச்சிடுச்சி
ரமேஷ் நாதன் : எந்த இடத்துல
ரமேஷ் தேவ கோட்டை :பெருமாள் கோவில் 5 வது தெருவுல

3 சீன நாணயங்களை உங்கள் விற்பனை பதி வெட்டின் மேல் வைங்க ,உங்கள் விற்பனை மற்றும் பண புழக்கத்தை அதிகரிக்கும் ,அப்படி இல்லையென்றால் லக்ஷ்மி மந்திரத்தை ஜெபித்த ஜெப மணியை ஒரு டப்பாவில் போட்டு வைங்க இதுவும் பண புழக்கத்தை அதிகரிக்கும்.தினமும் 108  தடவை இடாயி இடாயி டாகினி டிடிடி றீங் என்ற அற்புத மந்திரத்தை ஜெபித்து வாருங்கள் செல்வம் கொழிக்கும்.

ள் 

saappidum mun muththirai பிருதிவி முத்திரை!


பிருதிவி முத்திரை!


மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்.

Friday 14 December 2012

தலை விரித்தாடுகிறது

மன்னா நாட்டில் பஞ்சம் தலை விரித்தாடுகிறது 
அப்படியா அனைவருக்கும் ஷாம்பூ கொடுக்க ஆணையிடுங்கள் 
இல்லன ஓமோட அழகு குறிப்பை படிக்க சொல்லுங்க 

பெண்களை கண்டாலே சிரிச்சு சிரிச்சி பெசுவிங்கலாமே 
உண்மையா?
ஹி ... ஹி .... ஹி ....இழ்ழையெ 
ஜோக் எழுதுற ஓம் ஏன் அவரை போட்டு அப்படி அடிக்ராறு 
ஜோக் சொல்றதுக்கு  முன்னாடியே நல்லாருக்குன்னு சிரிசிட்டார் பாவம் 

Tuesday 11 December 2012

ஆடைவகைகள்:



ஆடைவகைகள்:
சாலுவை : சலதோஷம், தலைவலி, வாத நோய், வயிற்றுவலி, குளிர்பனி போகும்.
பட்டாடை : பித்தம், கபம் போகும். மகிழ்ச்சி, உத்தி, வியர்வை, காந்தி உண்டாகும்.
வெண்பட்டு : சுரம், சீதம், வாதம் போகும். காந்தி, அழகு உண்டாகும்.
நாருமடி : சளி, நீர் ஏற்றம், வாய்வு, சந்தி போகும். உடல் சுத்தி உண்டாகும்.
வெள்ளாடை : முக்குற்றம், வியர்வை போகும். ஆயுசு, அழகு, களிப்பு, போதம், வெற்றி உண்டாகும்.
சிவப்பாடை : பித்தம், வெப்பம், சுரம், வாந்தி, அருசி, கபம், மந்தம் உண்டாகும்.
பச்சை ஆடை : உடல்வெப்பம், ஐயம் போகும், கண்குளிர்ச்சி, உடல்பூரிப்பு, உண்டாகும்.
கறுப்பாடை : காசம், வெப்பு, விஷம், மந்தாக்கினி, பித்தம் போகும்.
மஞ்சளாடை : நீர்க்கடுப்பு, காசம், விஷ சுரம், நமைச்சல், வெப்பு, மலம் போகும்.
கம்பளம் : பெரும்பாடு, அசீரணம், கிராணி, சூலை, பேதி, சீழ் போகும்.
அழுக்குத்துணி : அழகு, அறிவு, போகும்; நோய், குளிர், துக்கம், தினவு, வெட்கம் உண்டாகும்

வெந்நீரும் பாத்திரமும்
தண்ணீரைக் காய்ச்சவும், காய்ச்சிய நீரைச் சேமிக்கவும் மட்கலங்களிலிருந்து மாறி உலோகப் பாத்திரங்களுக்கு நாகரிக வாழ்க்கை வளர்ச்சியடைந்திருக்கிறது. அவ்வாறு வளர்ச்சியடைந்த தன் பயன் என்னவென்பதை உரைப்பதாக, மருத்துவச் செய்தி அமைகிறது. வெந்நீர் எந்தெந்த உலோகங்களுடன் சேர்ந்திருந்தால் என்ன பலன் என்பதைக் கீழ்க்கண்டவாறு கூறுவர்.
1. பொற்கெண்டி : வாயு, கபம், அருசி, மெய்யழல், வெப்பு போகும். விந்து, நற்புத்தி, அறிவு உண்டாகும்.
2. வெள்ளிக் கெண்டி : வெப்பு, தாகம், குன்மம், பித்தம், ஐயம், காய்ச்சல் போகும். உடல் செழிக்கும். பலம் உண்டாகும்
3. தாமிர பாத்திரம் : இரத்த பித்தம், கண்புகைச்சல் போகும்.
4. பஞ்சலோகம் : முக்குற்றங்கள் நீங்கும்.
5. வெங்கலப் பாத்திரம்: தாது உண்டாகும்.
6. கெண்டி : நோய், சிரங்கு, வாய்க்குடைச்சல் போகும்.
7. பன்னீர்ச் செம்பு : சுவாசம், விக்கல், பிரமை, பித்த, ஐயவாயு, தாள் வலி போகும்.
8. இரும்பு பாண்டு நோய் போகும்; தாது உண்டாகும்; நரம்பு கெண்டி உரமாகும்; உடல் குளிர்ச்சி அடையும்
என்று, உலோகத்தினால் உண்டாகும் பயன் வெந்நீர் அருந்தும் போது கிடைப்பது உரைக்கப்பட்டுள்ளது.
வெந்நீர் மருந்து
தண்ணீர் எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்பதை உணர்த்தும் மடை நூலைப் போல, தண்ணீர் வெந்நீரினால் என்னென்ன பயன் உடலுக்குக் கிடைக்கிறது என்பது மேலே குறிப்பிடப் பட்டுள்ளது. தண்ணீர் வெந்நீராகக் காய்ச்சப்படும்போது எந்த அளவு காய்ச்சி பருகுங்கள். 
 அனைத்து நோயிலிருந்தும் விடுபட வெந்நீர் மருந்தாக அமைகிற தென்பதை அறியலாம். மேலும், நீரைக் கால், அரை, முக்கால் என்கிற முறையில் காய்ச்சுவதைப் போல, நீரை மருந்தாகவே மாற்றிட எட்டுப்பாகத்தில் ஒரு பாகமாகக் காய்ச்ச வேண்டும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. எண்சாண் உடம்பு, எறும்பும் தன்கையால் எட்டு என்று உலக உயிர்கள் எட்டுப் பாகமாகத் தோன்றியுள்ளதைத் தெரிவிக் கிறது. எட்டுக்கு ஒன்றாகத் தண்ணீரைக் காய்ச்ச வேண்டும்
என்றுரைப்பதும் உலகத்தின் உயிரினத் தோற்றத்துடன் தொடர்புடையதாக அமைவது போல் இருப்பதை அறியலாம்.
- பதார்த்த குண சிந்தாமணி தமிழ் வைத்திய நூல் 

பல் டாக்டர் : கண்ணா ஈ காட்டு 
பையன் : கேபிடல் ஈயா ஸ்மால் ஈயா டாக்டர்?

நம்ம தலைவர் கூட்டத்தில் பெசிகிட்டிருந்தபோது எதிர்ல இருக்குற மரம் விழுந்துடுச்சே ஏன் ?
அவர்தான் பேசியே அருத்துடுவாரே !

இந்த வெயிலுக்கு சாப்பாடே எறங்க மாட்டேங்குது
வெயிலுக்கு ஏன் சாப்பாடு போட்ற ,நீ சாப்ட வேண்டியதுதானே !

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"

rrrrrrrrrrrr

அம்மா தீட்சை பெற தகுதியிருப்பின்

nnnnnnnnnn

வெண்புள்ளி நோய்க்கு வைத்தியம்

காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவர வேண்டும்
நிறைய நீர் குடிக்க வேண்டும். உணவைக் குறைத்து பழங்கள் நிறைய சாப்பிடவேண்டும்.
பத்தியம்
வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது.

கஞ்சன்னா யாருப்பா

அப்பா கஞ்சன்னா யாருப்பா
பெத்த பிள்ளைக்கு கூட காசு கொடுக்காதவன்
அப்பா காசுன்னா என்னப்பா

மேனேஜர் மட்டும் சொன்னத வாபஸ் வாங்கலன்நா நாளைலருந்து ஆபிஸ்கே போக மாட்டேன்
அப்படி என்ன சொல்லிட்டாரு
இன்னையிலருந்து நீ சச்பென்ட்டுனு சொல்லிட்டாரு

நான் சின்ன வயசிலீயே டாக்டருக்கு படிக்க ஆச பட்டேன் மச்சி
ஏன் என்னாச்சு
5 வயசு பையனுக்கேல்லாம் சீட் தர மாட் ட ன்னு சொல்லிட்டாங்க 

Monday 10 December 2012

குட்டி வாண்டு கவியரசி

சின்ன கணேசா பெரிய கணேசா
அப்பளம் தின்னரு கொப்புளம் வந்துச்சு
மீன் தின்னாரு மீசை வந்துச்சி
- குட்டி வாண்டு  கவியரசி 

ஐஸ்

இந்த மாத வாடகையை என்ன்னால தர முடியாது
போன மாசமும் இதையேதானே சொன்னிங்க
எங்கிட்ட அன்னைக்கொரு பேச்சு இன்னைக்கொரு பேச்சு கிடையாது


கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதானே தேளு கொட்டிடுடுசின்னு வந்திங்க,மருந்து கொடுத்தேனே இப்ப என்ன
இப்ப மருந்து கொட்டிடுச்சி டாக்டர்

டாக்டர்
டே  மகனே பட்டனம்நா  பட்டனம்தாண்டா
ஏம்பா ஏசி தேட்டர் மட்டும் குளுர்லடா  சீட்டு கூட குளுர்துடா ஜில்லுனுருக்கு
ஐயோ அப்பா நன் ஐஸ் க்ரீம் வேச்சேம்பா  சீட்ல 

Saturday 8 December 2012

எல்லோர் இல்லத்திலும் செல்வம் பொங்கட்டும்

எல்லோர் இல்லத்திலும் செல்வம் பொங்கட்டும் 

காலை வணக்கம் 

- அன்புடன் R.P.OM

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 
தியானம் பண்ணுங்க நல்லது அதா முறையா மந்திர உபதேசத்துடன் கத்துக்குங்க இன்னும் சிறந்தது ,நான் free adds ல பணம் கட்டிஇலவசமா சொல்லி தந்துட்டு இருந்தேன் இப்போ அது முடியாது என் மக்கள் கஷ்டபடறாங்க ,நான் சம்பாதிச்சா மத்தவங்களுக்கு சேவை செய்ய முடியும்,பத்திரிகைல விளம்பரம் பண்ணி இருக்கேன் வந்துற்றுக்காங்க,விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்க 
1.தியானம் 
2.முத்திரை 
3.பரிகாரம் 
4.அதிர்ஷ்ட பெயர் 
5.அதிர்ஷ்ட யந்திரம் 
6.கவுன்சலிங் 
7.இயற்கை வைத்தியம் 
8.


மன அமைதி 
உளவியல் சித்திரம் 

Friday 7 December 2012

டே பையா இங்கவாடா

தனிமையில் இனிமை காணவேண்டும் ,இப்படி ஒரு அமைதியான இடம்  கிடைத்தும் ஒரு குழப்பம் 
2 பெரும் கூபிட்ராங்க எந்த பக்கம் போரது ?



குபேர வசிய மூலிகை :


அன்பான காலை வணக்கம் நண்பர்களே!

ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
********************************************************************************
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

 அசைபோட 5 விஷயங்கள்
 ***********************
1.குபேர வசிய மூலிகை :
கஸ்தூரி மஞ்சள் ,ஜவ்வாது,முடக்கத்தான் ,பச்சை கற்பூரம் கூட்டி அரைத்து பசு கோமியத்தில் சேர்த்து வியாபார ஸ்தலம் ,வீடுகளில் தெளித்தால் லக்ஷ்மி வாசம் கிடைக்கும். வியாபார தடை, பண முடை,கடன்கள் அகலும் ,இதனை முறைப்படி உபதேச மந்திரங்களுடன் பயன் படுத்தினால் இன்னும் சிறப்பு. 
 ***************************************************************************************************************************************************************
2.அழகே நலமா?
**************
தோல் வியாதிகள் காரணமாக உடம்பின் மேல் பகுதி தடித்துச் சொரசொரப்பாக இருக்கும். கொத்துமல்லி இலையை நன்றாக அரைத்து சொரசொரப்பான இடத்தில் மேல் பூச்சாகப் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே தோல் மிருதுவாகும்.
 ********************************************************************************
3.அன்பேநலமா?
துளசி நீர் மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடிய அபாரமான மருந்து. துளசி இலையை ஒரு டம்ளரில் போட்டு ஊற வைத்து அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.
**************************************************************************** 
4.ஆன்மீகம்
1.ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இந்த மந்திரத்தை பிள்லைகளுக்கு நாம சங்கிர்த்தனத்துக்கு சொல்லி கொடுங்கள்,இளம் வயதிலேயே மத சார்பின்மை மனதில் வளரும் இதுவும் ஒரு மஹா மந்திரமே,இதை ஜெபிப்பது பாவங்களையும் தோஷங்களையும் போக்கும்,வெற்றி தரும்.
*****
பாம்பாட்டி சித்தர் இன்று ராகு கேது பெயர்ச்சி ஆலயம் செல்ல முடியாதவர்கள் இதனை படியுங்கள் ,தோஷம நீங்க பெறுவீர்கள் 
ஓம் குருவே சொர்ணஸ்வாமி சித்தரே போற்றி
ஓம் ராமராம க்ருஷ்ண க்ருஷ்ண கஜானன சிவ சைதன்யரே போற்றி போற்றிஎங்கள் குரு நாதர் பரம்பரையி
ல் இப்படி வழிபடுவது வழக்கம் நீங்களும் வழிபடுங்கள் 

ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி 108 தரம் இன்று சொல்லுங்கள் [ மூல மந்திரம்]
 பாம்பாட்டி சித்தர் 1.ஓம் சட்டைமுனி சீடனே போற்றி 2.நவரத்தின பாம்புகளை தேடி அலைந்தவா போற்றி 3.குண்டலினி பாம்பை அறிந்தவா போற்றி 4.ரகு கேது சர்வ நாக தோஷம் களைபவா போற்றி5.மாங்கல்ய , புத்திர பாக்கியம் அளிப்பவா போற்றி 6.யோக சித்தி அளிப்பவா போற்றி 7.கவசமாய் இருந்து அடியார்களை காப்பவா போற்றி 8.அஷ்டமா சித்துக்களை அறிந்தவா போற்றி 9.அன்பே வடிவான எங்கள் இறைவா போற்றி போற்றி - anbudan R.P.OM
******************************************* 

ஓம் ஐம் க்லீம் சௌஹ சக்திதராய
ஓங் நங் மங் சிங் வங் யங் லம்போதராய
ஹரிம் ஹ்ரிம் ஸ்ரீம் சுப்ரமண்யாய சரவணோத்பவாய ஹிரண்யோத்பவாய
க்லீம் சர்வ வச்யாய தன ஆக்ருஷ்ய தம் பம் ஹம் ஜும் ஷம் சம் அதிர்ஷ்ட தேவதாய
சண்முகாய சர்வதோஷ நிவாரணாய
சர்வக்ரஹதோஷ நிவாரணாய
சிவாயா சிவ தனயாய இஷ்டார்த்தப் பிரதாயகாய
கம் கணபதயே க்லௌம் ஷம் சரவணபவாய வசி வசி!
குரு தேவர் சுக பிரம்ம மஹரிஷியை மனதில் நினைத்துகொண்டு கணபதியை எண்ணி ஜெபிக்கவும்.மந்திரத்தின் பலன் கலை அதை படுஇக்கும்போதே தெரிய வரும்.16 பெறுகளும் கிட்டும் பௌர்னமி அன்று விரதம் இருக்கவும்
*****************************
சனீஸ்வர தோஷம் விலக:
அதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி எனும் சூரிய பகவானை வணங்கி ``ஓம் கிலி சிவ'' என்ற மந்திரத்தை 128 முறை செபிக்கவும். இப்படி ஒரு மண்டலம்- 48 நாட்கள் தொடர்ந்து செபித்து வர உடும்பு போல் பற்றி நின்ற சனீஸ்வர தோஷம் விலகி விடும். இது ஏராளமானோர் செய்து பயனடைந்த முறையாகும்.
 **********************************************************************************2.
5.சமையல் குறிப்புகள்
**********************
  பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
**********************
கொள்ளு சூப்:
 தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
 தாளிக்கநல்லெண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
வரமிளகாய் - 2

செய்முறை
 மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

******************************************************************************
*வீட்டுகுறிப்புகள்
****************
தேங்காயை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து விட்டு உடைத்தால் அதன் நாரை சுலபமாக நீக்க முடியும். தேங்காயும் சரி பாதியாக உடையும். 
potoshop free யா கத்து தர்ராய்ங்கப்பா - யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையாகம்.அட ரொம்ப ஈஸிதான் படம் போட்டுல்ல விளக்குறாரு மனுஷன்
http://tamilpctraining.blogspot.com இதுல போயி கத்துக்குங

***************************************************************************
**5*நண்பேண்டா - நண்பர்கள் அறிமுகம்
தோழி மகேஸ்வரியின் முகபக்கத்திற்கு சென்றால் கதை,கவிதை,நகைசுவை என்று களை கட்டுகிறது
***********************************************************************
**அன்பெனும்தேன் தடவி வைத்திருக்கிறேன்என்இதயத்தில்நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
***************************************************************************
*கிருஸ்ணன் – குசேலன் சீத்தலை சாத்தனார் – பிசிராந்தையார் கர்ணன் – துரியோதனன் ஓம் - ? என்ன்னோடு – அந்த இடத்தை நிரப்ப யார் இருக்கிறீர்கள்?
***********************************************************************************
**நண்பர்கள்இதயமும் தேவைப்படுகிறதுஎன் அன்புஅளவுகடந்ததுஅதை அடைத்து வைக்கஒரு இதயம் போதாதுஎன்பதால்!*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.**** நம் நண்பர்கள்தான்நம் சொத்துக்கள்விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**
***********************************************
நல்லாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்குஉங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு          ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள்          குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்


மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள்          ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த    உலகை       மாற்றட்டும்.உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.


 மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.


 எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.


 எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.


**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.


அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.



 அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!-அன்புடன் ஓம் 8056156496

Tuesday 4 December 2012

"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி

nnnnnnnnnn

எழுது என் இதயத்திலும்

நீ 
இதழில் 
தருகின்ற 
அழுத்தம் 
என்
இதயத்திலும் 

இதழில் 
எழுதிய 
காதலை
 எழுது 
என் 
இதயத்திலும் 

உன் 
இதழில் 
உள்ளவை 
வரிகள் அல்ல 
நவீன 
ஓவியங்கள் 
-அன்புடன் R.P.OM

Saturday 1 December 2012

பாம்பாட்டி சித்தர்
இன்று ராகு கேது பெயர்ச்சி ஆலயம் செல்ல முடியாதவர்கள் இதனை படியுங்கள் ,தோஷம நீங்க பெறுவீர்கள்

ஓம் குருவே சொர்ணஸ்வாமி சித்தரே போற்றி
ஓம் ராமராம க்ருஷ்ண க்ருஷ்ண கஜானன  சிவ சைதன்யரே போற்றி போற்றி
எங்கள் குரு நாதர் பரம்பரையில் இப்படி வழிபடுவது வழக்கம் நீங்களும் வழிபடுங்கள்

ஓம் ஸ்ரீம்  வசி ஸ்ரீ  பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி 108 தரம் இன்று சொல்லுங்கள் [ மூல மந்திரம்]

பாம்பாட்டி சித்தர் 
1.ஓம் சட்டைமுனி சீடனே போற்றி 
2.நவரத்தின பாம்புகளை தேடி அலைந்தவா போற்றி 
3.குண்டலினி பாம்பை அறிந்தவா போற்றி 
4.ரகு கேது சர்வ நாக தோஷம் களைபவா  போற்றி
5.மாங்கல்ய , புத்திர பாக்கியம் அளிப்பவா போற்றி 
6.யோக சித்தி அளிப்பவா போற்றி 
7.கவசமாய் இருந்து அடியார்களை காப்பவா போற்றி 
8.அஷ்டமா சித்துக்களை அறிந்தவா போற்றி 
9.அன்பே வடிவான எங்கள் இறைவா போற்றி போற்றி 

கீழே உள்ள பதிவு மட்டும் இணையத்தில் இருந்து பெறப்பட்டது .




மருதமலை காட்டிலுள்ள எல்லா பாம்புகளும் ஒன்று கூடின. பாம்புகளின் தலைவன் கவலையுடன் பேசியது. பாம்புகளே! நம்மைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழியையே பொய்யாக்கி விட்டான் அந்த இளைஞன். நம் தோழர்கள் எத்தனை பேர் இறந்திருப்பார்கள். அவனைக் கடிக்க மறைந்திருந்து தாக்கினாலும், எப்படியோ நாம் இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்து, நம்மைத் தூக்கி வீசி எறிந்து விடுகிறான். புற்றுகளையெல்லாம் இடித்து தள்ளுகிறான். அதனுள் இருக்கும் குஞ்சுகளை நசுக்கி விடுகிறான். நம்மிலுள்ள விஷப்பைகளை எடுத்து மருந்து தயாரிப்பதாகச் சொல்கிறான். இப்போது, நம் பாம்பினத்திற்கே பெருமை தரும் வகையில் ஒளிவீசும் நவரத்தினங்களை உள்ளடக்கிய ரத்தினப் பாம்பைப் பிடிக்க வருகிறான். அது மட்டும் அவனிடம் சிக்கி விட்டால், அவன் இந்த உலகத்திலேயே பெரிய செல்வந்தனாகி விடுவான். மன்னாதி மன்னரெல்லாம் கூட அவனிடம் சரணடைந்து விடுவார்கள், என்றது. எல்லாப்பாம்புகளும் வருத்தப் பட்டதே ஒழிய, அந்த இளைஞனுக்கு எதிராக கருத்துச் சொல்லக்கூடத் தயங்கின. இவை இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே, காலடி ஓசை கேட்டது. தங்கள் உணர்வலைகளால், வருபவன் அந்த இளைஞனே என்பதை உணர்ந்து கொண்ட பாம்புகள் திசைக்கு ஒன்றாக ஓடின. பாம்புகளின் தலைவனும் உயிருக்கு அஞ்சி எங்கோ சென்று மறைந்து கொண்டது. இப்படி பாம்புகளையே கலங்கடித்த அந்த இளைஞனுக்கென பெயர் ஏதும் இல்லை. பாம்புகளைப் பிடித்து மகுடி ஊதி ஆடச்செய்பவன் என்பதால், பாம்பாட்டி என்றே அவனை மருதமலை பகுதி மக்கள் அழைத்தனர். அந்த இளைஞனே பாம்பாட்டி சித்தர் என்ற பெயரில் பிற்காலத்தில் மக்களால் வணங்கப்பட்டார்.
அவர் திருக்கோகர்ணம் என்னும் புண்ணிய தலத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. இந்தத்தலம் கர்நாடக மாநிலத்தின் உட்பகுதியில் இருப்பதாகவும், ஒரு சாரார், அவர் அங்கே பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தமிழகத்தில் புதுக்கோட்டை நகர எல்லையிலுள்ள திருக்கோகர்ணத்தில் பிறந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இவர் பிறந்த ஊர் பற்றிய ஆதாரம் சரியாக இல்லை.இவர் இளைஞராக இருந்த காலத்தில் தான் பாம்புகளைப் பிடித்து அவற்றின் நாக ரத்தினங்களை எடுப்பதையும், விஷத்தைக் கொண்டு மருந்து தயாரிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்போது, நவரத்தின பாம்பு பற்றிக் கேள்விப் பட்டு, அதைப் பிடித்து அதனுள் இருக்கும் ரத்தினங்களை எடுத்து விற்றால், உலகத்தின் முதல் பணக் காரராகி விடலாம் என்ற எண்ணம் கொண்டார்.அவர் தான் இப்போது காட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறார்.பாம்புகள் மறைந்து ஓடின. அப்போது ஓரிடத்தில் ஒளிவெள்ளம் பாய்ந்தது. ஆஹா....நவரத்தின பாம்பு தான் அவ்விடத்தில் மறைந்திருக்கிறது. அது தன் உடலை முழுமையாக மறைக்க முடியாததால், அதன் உடல் ஒளிவீசுகிறது என பாம்பாட்டி சித்தர் நினைத்துக் கொண்டார். ஆனால், ஒளி வெள்ளம் சற்று மங்கி, அவர் முன்னால் ஒரு மனிதர் நின்றார். அவரிடம், மகானே! தாங்கள் யார்? தங்கள் உடல் பொன் போல் பிரகாசிக்கிறதே. ஒருவேளை நான் தேடி வந்த பாம்பாக இருந்த நீங்கள், என்னிடம் சிக்காமல் இருக்க மனித உருவம் கொண்டீர்களோ! என்றவர், அவரது தேஜஸைப் பார்த்து, தன்னையும் அறியாமல் அவரது பாதங்களில் விழுந்து வணங்கினார். அந்த மகான் பாம்பாட்டி சித்தரை ஆசிர்வதித்தார். இளைஞனே! நீ இந்த சாதாரண பாம்புகளைப் பிடிப்பதற்காகவா இந்த உலகத்தில் பிறந்தாய். உன் பிறப்பின் ரகசியமே வேறு. நீ தேடி வந்த செல்வத்தின் அளவு பெரியது தான்.
செல்வமே உலகத்தை ஆட்டிவைக்கும் கருவி என நீ நினைக்கிறாய். எல்லா மக்களுமே இப்படி நினைப்பதால், நீயும் நினைப்பது இயற்கையே. எனவே, சாதாரண செல்வத்தை தேடி இங்கு வந்திருக்கிறாய், என்றவரை இடைமறித்த பாம்பாட்டி சித்தர், சுவாமி! தாங்கள் யார்? தங்கள் உடலே பொன்போல் மின்னுகிறதே, என்றார்.மகனே! உடலைக்கூட பொன்னாகக் கருதி பார்க்கும் அளவுக்கு, உன் மூளையில் செல்வம் தேடுவதின் தாக்கம் தெரிகிறது. சரி...இந்த உடல் என்றாவது அழியத்தானே போகிறது. அப்போது அது தீயில் கருகியோ, மண்ணில் நைந்தோ உருத்தெரியாமல் போய்விடுமே. அப்போது பொன்னை எங்கே தேடுவாய், என்றார்.அவரது அந்த வார்த்தைகள் இளைஞனின் மனதைத் தொட்டன.சுவாமி! இந்த அரிய உபதேசத்தை செய்த தாங்கள் யார் என்பதை நான் அறிந்து கொள்ளும் தகுதியுடையவனா? என பாம்பாட்டியார் பணிவுடன் கேட்டதும், அவனது மனம் செல்வத்தில் இருந்து விடுபட்டுவிட்டது என்பதை வந்தவர் உணர்ந்து கொண்டார்.மகனே! நான் தான் சட்டைமுனி சித்தர். இந்தக் காடுகளில் வசிக்கிறேன். நீ நவரத்தின பாம்பைத் தேடி வந்துள்ளதை நான் அறிவேன். அந்தப்பாம்பு உனக்கு பல லட்சம் கோடி தங்கம் வாங்குமளவு செல்வத்தைத் தரும். அதனால் அதை ஆட்டி வைக்க வந்துள்ளாய். ஆனால், அதையும் விட உயர்ந்த பாம்பு ஒன்று இருக்கிறது தெரியுமா? என்றதும், பாம்பாட்டியாரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.அப்படியா? அப்படியும் ஒரு பாம்பினம் இருக்கிறதா? அப்படியானால், எனக்கு இந்த சாதாரண நவரத்தின பாம்பு வேண்டாம். தாங்கள் சொல்லும், அந்த உயரிய இனமே வேண்டும், என்ற பாம்பாட்டியாரிடம், அப்படியா! அந்தப் பாம்பு உன் உடலுக்குள்ளேயே இருக்கிறது, என்றார் சட்டைமுனி.இதைக் கேட்டு ஆ...வென மலைத்து விட்டார் பாம்பாட்டியார்.
சுவாமி! தாங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை. மனிதர்களின் உடலுக்குள் எப்படி பாம்பு இருக்கும்? பாம்பாட்டியார் சந்தேகம் எழுப்பினார். சட்டைமுனி அவரிடம், மகனே! உன்னுள் மட்டுமல்ல. உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனிடமும் இந்தப்பாம்பு இருக்கிறது. அதன் பெயர் குண்டலினி. அந்த பாம்பை நீ ஆட்டுவித்தால் போதும். உன்னிலும் உயர்ந்தவர் யாரும் இருக்க முடியாது. அதை மட்டும் நீ அடக்கிவிட்டால், மாபெரும் சித்தனாகி விடுவாய். சித்தர்களுக்கு உலகப்பொருள்கள் மீது ஆசை வருவதில்லை. அவர்களால் தங்கத்தையே உருவாக்க முடியும். ஆனால், அதைத் தாங்கள் பயன்படுத்தாமல், உலக நன்மைக்காக பயன் படுத்துவர். அப்படிப்பட்ட மனப் பக்குவத்தை தருவதே குண்டலினி. உலகத்தில் உள்ள எல்லாருமே பணத்தைத் தேடி ஓடுகிறார்கள். ஆனால், நிஜமான செல்வம் உன் உடலுக்குள் இருக்கிறது. அதைத் தேடு, என்றார். பாம்பாட்டியார் அவரது உபதேசத்தை ஏற்றார். சுவாமி! தாங்கள் சொல்வது இப்போது எனக்கு விளங்குகிறது. செல்வத்தை அடைந்து தனியொரு மனிதனாக ஆட்சிசெய்வதில் இல்லாத சந்தோஷம், தாங்கள் சொல்லும் குண்டலினியை எழுப்புவதன் மூலம் கிடைக்குமென நம்புகிறேன். தங்கள் உபதேசப்படி நடப்பேன், என்று சொல்லி அவர் காலில் விழுந்தார். செல்வமே பெரிதெனக் கருதிய ஒருவன், தன் கருத்தை ஏற்று, உடனடியாக தன்னைச் சரணடைந்ததை எண்ணி மகிழ்ச்சியடைந்த சட்டைமுனி, மகனே! உடலுக்குள்  குண்டலினி என்னும் சக்தி பாம்பு போல தொங்கிக் கொண்டிருக்கும். இந்தப் பாம்பு எப்போதுமே தூங்கிக் கொண்டிருக்கும். இது தூங்குவதால் தான் மனிதன் உலக வாழ்க்கை நிரந்தரமென எண்ணி, அறியாமையில் மூழ்கித்தவிக்கிறான். இதை தட்டி எழுப்ப வேண்டுமானால், தெய்வசிந்தனை எந்நேரமும் இருக்க வேண்டும். அப்போது அந்தப் பாம்பு விழிக்கும். நமது ஜீவனுக்குள் அது அடைக்கலமாகும். அப்போது, உனக்குள் இருக்கும் ஆத்மா இது தான் உலகம், இது தான் வாழ்க்கை என்பதைப் புரிந்துகொள்ளும். அப்போது, நீ தேடியலையும் பொருள் தரும் ஆனந்தத்தை விட பேரானந்தம் உனக்கு கிடைக்கும், என்றார்.
பாம்பாட்டியார் சட்டைமுனிவரின் பேச்சைக் கேட்டு பரவசமடைந்தார்.சித்தரே! இப்படி ஒரு அரிய உபதேசத்தை வழங்கி, என்னை அறிவீனத்தில் இருந்து மீட்ட தாங்களே எனது குருநாதர். தாங்கள் சொன்ன சொல்படி நடப்பேன். இது உறுதி, என்றார் பாம்பாட்டியார். அவரது மனஉறுதி கண்டு மகிழ்ந்த சட்டை முனிவர் பாம்பாட்டியாருக்கு அருள்வழங்கி, மகனே! நீ பாம்பாட்டியே பிழைத்ததால், அந்த  பெயரே உனக்கு நிலைத்து விட்டது. இனி உலகமக்கள் உன்னை பாம்பாட்டி சித்தர் என வழங்குவர் எனச்சொல்லி விட்டு மறைந்து விட்டார். இதன்பிறகு, அஷ்டமாசித்திகள் எனப்படும் கூடுவிட்டு கூடு பாய்தல் உள்ளிட்ட அனைத்து சித்து வேலைகளும் பாம்பாட்டி சித்தருக்கு கைவந்த கலையாயின. குண்டலினியை தட்டி எழுப்பும் வகையில் கடும் தியானங்களிலும் அவர் ஈடுபட்டார். பின்னர், தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் ரசவாதம் எனப்படும் வித்தை அவருக்கு தெரிந்தது. நவரத்தினக் கற்களைத் தேடி ஓடிய காலம் போய், அவர் வெறும் கற்களைத் தொட்டாலும் அவை நவரத்தினங்களாக மாறின. அதனால் தனக்கு என்ன பயன் என்று, அவற்றை வீசிவிட்டார். வானத்தில் நடந்து செல்லும் பயிற்சியும் அவருக்கு கிடைத்து விட்டது. ஒருமுறை அவர் வானத்தில் நடந்து சென்ற போது, ஒரு அரண்மனையைக் கண்டார். அந்நாட்டு  அரசன் இறந்து விட்டதால், மகாராணி தன் கணவனின் உடலில் விழுந்து புரண்டு அழுது கொண்டிருந்தாள். ஊரே சோகமயமாக இருந்தது. அப்போது வானத்தில் இருந்தபடியே இறந்துபோன ஒரு பாம்பை மன்னனை சுற்றிநின்ற மக்களின் கூட்டத்தில் வீசினார் பாம்பாட்டி சித்தர். கூட்டத்தினர் அலறி அடித்து ஓடினர். ஆனால், ராணி மட்டும் மிரளவில்லை. அவள் அங்கேயே நின்றாள். அப்போது, பாம்பாட்டி சித்தர் தன்னை மறையச்செய்து, மன்னனின் உடலுக்குள் புகுந்தார். இறந்து கிடந்த மன்னன் உருவில் சித்தர் எழுந்து நின்றார். ராணிக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை. அவரை அணைத்துக் கொள்வதற்காக வேகமாக அவரருகில் சென்றாள். மன்னன், வடிவிலுள்ள சித்தரோ, அவளைத் தடுத்து விட்டார். அவர் இறந்து கிடந்த பாம்பின் அருகில் சென்று, பாம்பே எழுந்திரு, என்றார். அது உயிர் பெற்றது. மகிழ்ச்சியுடன் தனது கூட்டம் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தது. அதை தடுத்து நிறுத்திய மன்னர், பாம்பே! நீ வாழும் காலத்தில் உன் கூட்டம் எந்தளவுக்கு உன்னை அவமானம் செய்தது? ஆனாலும், உயிர் பெற்றதும் உன் கூட்டத்தை தேடி ஓடுகிறாயே! இந்த உலக வாழ்வில் அப்படி என்ன சுகத்தைக் கண்டுவிட்டாய்? என்றார்.
இதைக் கண்ட ராணியும், அமைச்சர்களும் இறந்தவர் உயிர் பிழைத்து எழுந்ததால் இவருக்கு சித்தசுவாதீனம் இல்லாமல் போய்விட்டதோ! அதே நேரம், இறந்த பாம்பை இவர் உயிர் பிழைக்க வைத்தது எப்படி? என்று குழம்பிப் போனார்கள். அரசிக்கு ஒரு சந்தேகம்.மன்னர் சாகும் முன்பு, நான் ஒருத்தி போதாதென்று, ஏராளமான பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். சிற்றின்பத்திலேயே மூழ்கிக்கிடப்பார். பணம் வரி கிஸ்தி என எந்நேரமும் செல்வத்தின் நினைப்பிலேயே கிடப்பார். இப்போதோ, ஓடுகிற பாம்பை நிறுத்தி, உலக வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என தத்துவம் பேசுகிறார். இதென்ன குழப்பம், என அதிர்ந்து நின்றாள். இதற்கு பதிலளிக்கும் வகையில் சித்தர் பாட ஆரம்பித்தார். நாடும், வீடும், மனைவியும், உறவும் உயிர் போன பிறகு கூட வராது என்ற பொருளில் அவரது பாடல் அமைந்தது. நான் மனதில் நினைத்தது இவருக்கு எப்படி தெரிந்தது? நம் எண்ணத்திற்கு தக்க பதில் போல் இந்தப் பாடல் இருக்கிறதே என அவள் மேலும் அதிர்ச்சியடைந்தாள். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு, மன்னரே! தாங்கள் எப்படி உயிர் பெற்றீர்கள்? இங்கு நான் காண்பது கனவா, நிஜமா? எனக்கேட்டாள். அதற்கு மேலும் அங்குள்ள மக்களை குழப்ப விரும்பாத சித்தர், மகாராணி! உன் கணவனின் உடலில் புகுந்திருக்கும் என் பெயர் பாம்பாட்டி சித்தர். நீ மன்னனைப் பிரிந்த துயரத்தில் அழுதாய். இறப்பு சாதாரண மான ஒன்று. அது நிச்சயம் எனத்  தெரிந்த பிறகும், இறந்தவர்களுக்காக அழக்கூடாது என்பதை உனக்கும், உலகுக்கும் அறிவிக்கவே இந்த விளையாடலைச் செய்தேன், என்றார்.சித்தரின் உண்மை மொழிகளால் ராணி மனம் தேறினாள்.பின்னர் மன்னனின் உடலில் இருந்து விடுபட்டார் சித்தர். மன் னனின் உடல் மீண்டும் சாய்ந்தது.இப்படி உலகுக்கு அளப்பரிய தத்துவத்தை தந்த பாம்பாட்டி சித்தர், மருதமலையில் சித்தியடைந்தார் என்றும், விருத்தாச்சலம் அருகிலுள்ள பழமலையில் என்று சிலரும், துவாரகையில் அவர் சித்தியடைந்ததாகவும் கூறுகிறார்கள்.